செய்யூர் அருகே புதிய அங்கன்வாடி மையம் கட்டப்படுமா?

செய்யூர் அருகே புதிய அங்கன்வாடி மையம் கட்டப்படுமா?
புதிய அங்கன்வாடி மையம் கட்டப்படுமா? எதிர்பார்ப்பு
செய்யூர் அருகே புதிய அங்கன்வாடி மையம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

செய்யூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிமேடு கிராமத்தில், அங்கன்வாடி மையத்தில், 12 குழந்தைகள் படிக்கின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.

பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், நாளடைவில் சேதமடைந்தது. முன்னெச்சரிக்கையாக, சில மாதங்களுக்கு முன் அங்கன்வாடி மையம், தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. தனியார் கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால்,

குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, குழந்தைகளின் நலன் கருதி, புதிய அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story