பிஜேபி தவிர்த்து எந்த கட்சி வந்தாலும் ஏற்றுக்கொள்ளும்- ஜெயக்குமார்

பிஜேபி தவிர்த்து எந்த கட்சி வந்தாலும் ஏற்றுக்கொள்ளும்- ஜெயக்குமார்

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்

தேர்தலுக்கு பின் ஓபிஎஸ் பிஜேபியில் இணைந்து விடுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு முன்னதாக தொழில் அமைப்புகளுடன் கலந்து ஆலோசிக்கும் கூட்டமானது நடைபெற்றது.

நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொழில் அமைப்புகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிஜேபிக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை ஓபிஎஸ் செய்து வருகிறார் எனவும்,

தேர்தலுக்காக பிறகு ஓபிஎஸ் பிஜேபியில் இணைந்து விடுவார் என தெரிவித்தார்.அதிமுகவைபொறுத்தவரையில் பெரிய கூட்டணி மகத்தான கூட்டணி அமையும் எனவும் பிஜேபி தவிர்த்து யாரு வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம் என்றார்.அதிமுக யாரையும் கெஞ்ச வேண்டிய நிலையில் இல்லை எனவும் யாருக்காகவும் கதவை தட்ட வேண்டிய சூழலும் இல்லை என்றவர்,

அதிமுகவை நோக்கி தான் கட்சிகள் வரும் என தெரிவித்தார். திமுக சார்பாக தேர்தல் அறிக்கைக்காக கனிமொழி தமிழகம் முழுவதும் பயணம் செய்கிறார் நான்கு சுவற்றுக்குள் இருந்து கொண்டு மனுக்களை பெற்று வந்தவர்கள் அதிமுகவை போன்று ஆடிட்டோரியங்களில் மனுக்களை வாங்க திமுகவும் தற்போது செய்து வருகிறது.

எனவும் மக்கள் எங்களுடன் மனு கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்களைத் தடுத்து வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.17 வருடங்களாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக இதுவரை தமிழகத்துக்கு என்ன செய்தது என கேள்வி எழுப்பினார்.அதிமுக மாநில உரிமைக்காக பாடுபட்டதாகவும் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக என்றவர் எல்லை தாண்டி மீன்பிடிப்பது தொடர்பாக கைது

குறைவான சம்பவங்களே அதிமுக ஆட்சியில் நடைபெற்றது என்றவர் அதிமுகவை கண்டு இலங்கை அரசிற்கு பயம் இருந்தது என தெரிவித்தார். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறயுள்ளது.

தொடர்பாக கேள்விக்கு மக்களை பாதிக்கின்ற எந்த சட்டமாக இருந்தாலும் சிறுபான்மையின மக்கள் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டாலும் அதை அதிமுக எதிர்க்கும் என்றார்.அண்ணாமலை பொறுத்த மட்டில் பல கருத்துகளை கூறி மாட்டிக் கொண்டு வருவதாகவும் அதிமுகவைப் பொறுத்த மட்டில் திமுகவின் பகையாளி பாஜகவும் பகையாளி அதிமுகவை எதிர்க்கும் போது என தெரிவித்தார்.

Tags

Next Story