கெருகம்பாக்கம் குளம் பராமரிக்கப்படுமா?

கெருகம்பாக்கம் குளம் பராமரிக்கப்படுமா?

குப்பைகள் சூழ்ந்த குளம் 

கெருகம்பாக்கம் வேணுகோபால சுவாமி கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தி குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம், கெருகம்பாக்கம் ஊராட்சியில், வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பின்புறம் குடியிருப்புக்கு மத்தியில் கோவில் குளம் உள்ளது. இந்த குளம் தற்போது பராமிரிப்பின்றி உள்ளது. குளம் முழுதும் செடிகள் வளர்ந்து, துார்ந்து போய் உள்ளது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலக்கிறது. இதனால், கோவில் குளம் கழிவுநீர் குட்டையாக மாறிவிட்டது. கழிவுநீர் கலப்பதை தடுத்து குளத்தை துார்வாரி ஆழப்படுத்தி, குளக்கரையை சுற்றி நடைபாதைகள் அமைக்கவேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்."

Tags

Next Story