ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் ஒரகடம் குளம் சீரமைக்கப்படுமா?

ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் ஒரகடம் குளம் சீரமைக்கப்படுமா?

 ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் ஒரகடம் குளம் சீரமைக்கப்படுமா என எதிர்பாஅர்ப்பு வலுத்துள்ளது. 

ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் ஒரகடம் குளம் சீரமைக்கப்படுமா என எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம், படப்பை அடுத்த சென்னக்குப்பம் ஊராட்சி, ஒரகடம் சந்திப்பில், மேம்பாலத்தின் கீழ் குளம் உள்ளது. இந்த குளம், 15 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கியது. ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்த பின், அப்பகுதியில் கடைகள் மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்தன. அதன்பின், குளம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. மேலும், குளத்தை சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு, உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் கலந்து தண்ணீர் மாசடைந்து வருகிறது.

அப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகள் குளத்தில் கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், குளத்தின் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், குளத்தின் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, குளத்தை துார்வாரி, சுற்றுச்சுவர் அமைத்து, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைத்து சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்."

Tags

Next Story