சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

புதர் மண்டி கிடக்கும் சுகாதார வளாகம் 

ஏனாத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த சுகாதார வளாகம் தற்பொழுது புதர் மண்டி காணப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துாரில், 20 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டடப்பட்டது. கிராமத்தினர் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், சுகாதார வளாக தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பழுதடைந்துவிட்டது. தண்ணீர் வசதி இல்லாததால், கிராமத்தினர் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியவில்லை. இதனால், சுகாதார வளாகம் புதர்மண்டி வீணாகி வருகிறது. எனவே, மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏனாத்துார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story