காற்றாலை மின்கம்பங்களை மாற்றுப்பாதையில் அமைக்கணும்...!

மஞ்சநாயக்கன்பட்டியில் காற்றாலை மின்கம்பங்களை மாற்றுப்பாதையில் அமைக்குமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது.

மஞ்ச நாயக்கன் பட்டியில் காற்றாலை மின் கம்பங்களை மாற்றுப்பாதையில் அமைக்க மனு. கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா மஞ்ச நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் காற்றாலைகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. காற்றாலையில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்காக அப்போது இதில் மின் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது

. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பங்கள் நிறுவ கனரக வாகனங்கள் அப்பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதற்கு இடையூறாக உள்ளதாகவும், மின் கசிவு ஏற்படும் போது பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி மஞ்ச நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அந்த மனுவில் தனியார் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்களை மாற்று பாதையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story