கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற செந்நாய்கள்

கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற செந்நாய்கள்

  தாளவாடி அருகே கன்றுக்குட்டிகளை செந்நாய்கள் கடித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாளவாடி அருகே கன்றுக்குட்டிகளை செந்நாய்கள் கடித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாளவாடி அருகே கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற . செந்நாய்கள் ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள இக்களூர் கிராமத்தைசேர்ந்தவர் சேகரப்பா (வயது 40). விவசாயி. இவர் 5 மாடுகள், 3 கன்றுக்குட்டிகள் வளர்த்து வருகிறார். இவற்றை வழக்கம் போல் தனது விவசாய தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இந்த நிலையில் கால்நடைகளை வீட்டுக்கு ஓட்டி வர தோட்டத்துக்கு சேகரப்பா சென்ற போது அங்கு 3 கன்றுக் குட்டிகள் கடித்து குதறப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் செத்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகே பார்த்த போது செந்நாய்கள் கூட்டம் இருந்தது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய செந்நாய்கள் சேகரப்பாவின் தோட்டத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டி களை கடித்துகொன்றது தெரியவந்தது. பின்னர் அவற்றை அங்கிருந்து விரட்டிவிட்டார். மேலும் இதுகுறித்து தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். செந்நாய்கள் கன்றுக்குட்டிகளை கடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story