பூச்சி மருந்து குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி..!

பூச்சி மருந்து குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி..!

திருவள்ளூரில் கடன் நிறுவனத்தின் தகாத வார்த்தைகளால் பூச்சி மருந்து குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருவள்ளூரில் கடன் நிறுவனத்தின் தகாத வார்த்தைகளால் பூச்சி மருந்து குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூரை மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பஞ்சட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி(வயது45).இவரது மனைவி நிர்மலா ( வயது 43) இவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மணி கடந்த ஆண்டு புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் 24 மாதம் தவணை முறையில் கடன் பெற்றுள்ளார்.மேலும் அத்தொகையை 12 மாதங்கள் செலுத்தி வந்தநிலையில், வீட்டின் வறுமை காரணமாக 13 வது மாத தவணை கட்ட தவறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாதத் தவணை கட்டும் தேதி 10 தினங்கள் தள்ளிச் சென்றதால் தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கிராமத்தில் உள்ள மணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மணி வீட்டில் இல்லாததால் அவரது மனைவி நிர்மலாவிடம் கட்ட தவறிய ஒரு மாத தவணத் தொகையை கேட்டுள்ளார். அப்பொழுது தங்களது குடும்ப கஷ்டம் காரணமாக இந்த மாதம் தவணை செலுத்த முடியவில்லை இன்னும் ஒரு வார காலத்தில் செலுத்தி விடுவதாக நிர்மலா கூறியுள்ளார். இருப்பினும் தனியார் நிதி நிறுவன ஊழியர், மணியையும், அவரது மனைவி நிர்மலாவையும் தகாத வார்த்தைகளால் திட்டியும் கடுமையான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிர்மலா பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் நிர்மலா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நிர்மலாவின் கணவர் மணி கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story