அம்பத்துாரில் திருமண ஆசை காட்டி பணம் பறித்த பெண் கைது

அம்பத்துாரில் திருமண ஆசை காட்டி பணம் பறித்த பெண் கைது

பைல் படம்

அம்பத்துாரில் திருமண ஆசை காட்டி பணம் பறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
அம்பத்துாரைச் சேர்ந்தவர் கோபிராஜன், 33; கேட்டரிங் படிப்பு முடித்துள்ள இவர், 33, வயதாகியும் திருமணமாகவில்லை. பத்திரிகையில் வெளியான மணமகன் தேவை விளம்பரத்தை பார்த்து, சிவாஸ்ரீ என்ற பெண்ணின் மொபைல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். பெற்றோர், உறவினர் இல்லாத பெண்ணான சிவாஸ்ரீ, கோபிராஜனிடம் நெருக்கமாக பழகி, பண நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்னைகளைக் கூறி, 15 லட்சம் ரூபாய் வரை, வங்கிக் கணக்கில் பெற்றுள்ளார். திருமணம் குறித்து பேசும்போதெல்லாம் சிவாஸ்ரீ அதை தவிர்த்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கோபிராஜன், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் புகார் அளித்தார். விசாரணையில், சிவாஸ்ரீ, ஆவடி மோரையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி, 42, என்பதும், இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது. திருமண தகவல் மையம் நடத்தி வந்த இவர், திருமணமாகாத ஆண்களை குறி வைத்து மோக வலையில் வீழ்த்தி, மொபைல்போனில் பேசியே பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்தனர்

Tags

Next Story