விபசாரத்திற்கு அழைத்து தொழிலாளியிடம் ரூ.26 ஆயிரம் பறிப்பு பெண் கைது !

விபசாரத்திற்கு அழைத்து தொழிலாளியிடம் ரூ.26 ஆயிரம் பறிப்பு பெண் கைது !

கைது

சேலம் புதிய பஸ் நிலையத்தில் விபசாரத்திற்கு அழைத்து தொழிலாளியிடம் பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஏ.அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் ராமமூர்த்தி (வயது 27) நூல் மில் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு பெண் பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி அவரை விபசாரத்திற்கு அழைத்து உள்ளார். அதற்கு ராமமூர்த்தி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் ராமமூர்த்தி சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.26 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து, புதிய பஸ் நிலையத்தில் இருந்த அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சேலம் புதிய பஸ் நிலையத்தில் விபசாரத்திற்கு அழைத்து தொழிலாளியிடம் பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story