பண மோசடி செய்த பெண் கைது

பண மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 5.50 லட்சம் ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.  

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 5.50 லட்சம் ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் அருமடல் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரிடம் பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதி சேர்ந்த ஆனந்தன் மகள் விஜயா வயது 41, என்பவர் தான் SV டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருவதாகவும், யுரோப் நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பி வைப்பதாகவும் மாதம் 2,50,000 ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ராமகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினரான சிவசங்கர் ஆகியோரிடம் முன்பணமாக தலா 2,75,000 /- என மொத்தம் 5,50,000/-* வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக S.V டிராவல்ஸ் உரிமையாளர் விஜயா என்பவரின் மீது மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட குற்ற பிரிவில் கடந்த 2023 ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து வந்த மாவட்ட குற்றப்பிரிவு. காவல்துறையினர் விஜயா மீது வழக்கு பதிவு செய்து ஜூன் 19ஆம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாரிமன்னன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார் .

Tags

Next Story