கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது !

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது !
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கைது தெற்கு காவல் காவல் நிலைய போலிசார் விசாரணை 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தைச் பகுதியை சேர்ந்தவர் ராமர் (60) என்பவரது மனைவி சுந்தரி வயது (56) சுந்தரி கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட சிறப்பு பிரிவு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ராஜபாளையம் பொன்னகரம் பகுதி அருகே சுந்தரி கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற தெற்கு காவல் நிலைய போலிசார் சுந்தரியை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் இருந்து சுமார் 4.400 கிராம் எடையுள்ள கஞ்சா இருப்பது தெரியவந்த நிலையில் பிடிபட்ட கஞ்சாவை பறிமுதல் செய்து சுந்தரியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story