தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்ற பெண் கைது

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்ற பெண் கைது
பைல் படம்
கன்னியாகுமரியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் கொட்டாரம் பெரிய விளை போன்ற பகுதிகளில் கடைகளில் சோதனை நடத்திய போது, ஒரு கடையில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த கடையில் இருந்த 30 பாக்கெட் போதை புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக அந்த கடை நடத்திய சுசீலா (50) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story