உள்ளாடையில் ரூ. 1 கோடி தங்கம் மறைத்து கடத்தி வந்த பெண் கைது

உள்ளாடையில் ரூ. 1 கோடி தங்கம் மறைத்து கடத்தி வந்த பெண் கைது

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பெண் பயணி உள்ளாடைகளில் கடத்த முயன்ற ரூ. 99.18 லட்சம் மதிப்புள்ள 1.42 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பெண் பயணி உள்ளாடைகளில் கடத்த முயன்ற ரூ. 99.18 லட்சம் மதிப்புள்ள 1.42 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று மாலை திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்கத் துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பெண் பயணி ஒருவர், வெளியில் செல்ல முயன்றார். அவரை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப் போது அவர் உள்ளாடைகளில், பசை வடிவில் 1.42 கிலோ தங்கத்தை 3 பாக்கெட்டுகளில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. ரூ.99.18 லட்சம் மதிப் புள்ள அத்தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அப்பெண்ணையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story