பேருந்தில் நகையை திருடிச் சென்ற பெண் கைது

பேருந்தில்  நகையை திருடிச் சென்ற பெண் கைது

நகையை திருடிச் சென்ற பெண் கைது

பெரம்பலூரில் பேருந்தில் நகையை திருடிச் சென்ற பெண்ணை கைது செய்த காவல்துறையினர். இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய பெரம்பலூர் காவல்நிலைய காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள்.
பெரம்பலூரில் பேருந்தில் நகையை திருடிச் சென்ற பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து 9பவுன் நகை மற்றும் 2 ஜோடி வைர தோடு ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர், எளம்பலூர் சாலை, சாமியப்பா நகரைச் சேர்ந்த ஜோதி ராமலிங்கலம் என்பவர் மனைவி ஜெயமணி 67, இவர் கடந்த 22.11.2023 –ம் தேதி சொந்த வேலை காரணமாக துறையூர் சென்றுவிட்டு மீண்டும் பெரம்பலூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் கைப்பையில் கொண்டுவந்த 9 பவுன் நகை மற்றும் 2 ஜோடி வைர தோடு ஆகியவற்றை காணாமல் போயிருந்தது இது குறித்து பெரம்பலூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்ததிலும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், குட்டை கிராமம் பகுதியைச் சேர்ந்த மதன் என்பவரது மனைவி சோலையம்மா (30) என்பவர் திருட்டில் ஈடுபட்டுள்ளது. விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் இன்று குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட பெண்ணை கைது செய்து அவரிடமிருந்து 9-பவுன் எடையுள்ள 6 தங்க வளையல்கள், மற்றும் 2 ஜோடி வைர தோடு ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படியும் பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்ப்பாளர் பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி குற்றவாளியை, பெரம்பலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய பெரம்பலூர் காவல்நிலைய காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்கள்.

Tags

Next Story