கந்து வட்டி வசூலித்த பெண் கைது

கந்து வட்டி வசூலித்த பெண் கைது

கந்துவட்டி வசூலித்த பெண் கைது 

காட்பாடி பகுதியில் கந்துவட்டி வசூலித்து வந்த பெண்ணை காட்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம்,காட்பாடி செங்குட்டை நியூதெருவில் வசித்து வருபவர் ஜெயந்தி (43). இவர் கடந்த 23-ந் தேதி காட்பாடி காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், செங்குட்டை புதுத்தெரு விரிவு பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் மனைவி தாரா (50) அதிக வட்டி வசூலிக்கிறார். நான் அவரிடம் ரூ.40 ஆயிரம் கடனாக பெற்றேன்.

வார வட்டியாக ரூ.2 ஆயிரம் கட்ட வேண்டும் என்றார். வட்டி கட்ட சிறிது காலதாமதம் ஆனது. அதனால் தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் தாரா கந்து வட்டி வசூலிப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் மீது காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து வாகனங்கள், ஏ.டி.எம். கார்டுகள், கையொப்பமிட்ட பாண்டு பத்திரங்கள், செல்போன்கள், ஆர்.சி.புத்தகங்கள் மற்றும் ஆதார் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத் காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story