பெண்ணை தாக்கி தங்க நகை பறிப்பு - காவல்துறையினர் விசாரணை

பெண்ணை தாக்கி தங்க நகை பறிப்பு - காவல்துறையினர் விசாரணை

காவல் நிலையம் 

பாலக்கோட்டில் முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கி நான்கு பவுன் தங்க நகையை பறித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த விநாயகம் என்பவருக்கும் மழைநீர் வீட்டின் கூரை மீது விழுவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனிடையே நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேத நாயகம், மனைவி மல்லிகா ஆகியோர் ராஜ்குமார் மனைவி ஷன்மதியை இரும்பு கம்பியால் தாக்கி கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story