குடும்பத்தகராறில் குழந்தைகளுடன் தாய்விஷம் குடிப்பு : பெண் குழந்தை பலி

குடும்பத்தகராறில் குழந்தைகளுடன் தாய்விஷம் குடிப்பு : பெண் குழந்தை பலி
குழந்தை பலி
குடும்ப தகராற்றால் குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி 4 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவையாறு அருகே தில்லைஸ்தானம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன்(39). விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா (27) இவர்களுக்கு அனுஸ்ரீ(7), அகஸ்டி(4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்குள் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு மனைவி விஜயா பெயின்ட் அடிக்கும் தின்னரில் எலி பேஸ்டை கலந்து தானும் குடித்துவிட்டு, 2. மகள்களுக்கும் கொடுத்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுஸ்ரீ, அகஸ்டி ஆகிய இருவரையும் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விஜயா தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் அகஸ்டி, அனுஸ்ரீ ஆகியோரை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுடன் சிகிச்சை முடிந்து விஜயாவும். உடன் சென்றிருந்தார்.இதில் அகஸ்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். அனுஸ்ரீ தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருவூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story