பெண் வேட்பாளர்களால் சூடு பிடிக்கும் விளவங்கோடு தொகுதி

பெண் வேட்பாளர்களால் சூடு பிடிக்கும் விளவங்கோடு தொகுதி

பெண் வேட்பாளர்கள்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நான்கு பெண் வேட்பாளர்கள் போட்டி. வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் நாளை முதல் பிரச்சாரம் சூடு பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் நான்கு பிரதான அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை துவங்கி உள்ளன. விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த விஜயதரணி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளும் இம்முறை பெண் வேட்பாளர்களையே களம் இறக்கி உள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர் ராணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெமினி இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். பா.ஜ., வேட்பாளர் நந்தினி, காங்., வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில் தொகுதியில், நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story