ஜோலார்பேட்டை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
கோப்பு படம் 
ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்துார் பகுதியில் உடல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்துார் பகுதியில் உடல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்துார் பகுதியை சேர்ந்த விவசாயிவேலு.

இவரது மனைவி சாந்தி(48). இவர் கடந்த சில ஆண்டுகளாகவே உடலில் பல்வேறு பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இதனால் விரக்தி அடைந்த சாந்தி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் தெரிந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் அங்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சாந்தியின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story