முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
முத்துப்பேட்டை அருகே பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் வயது 50 இவர் விவசாய தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவி தவமணி வயது 45. கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை தவமணி குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார் .இதனை பார்த்த உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் தவமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story