பூஜை அறையில் தூக்கிட்டு பெண் தற்கொலை !

பூஜை அறையில் தூக்கிட்டு பெண் தற்கொலை !

தற்கொலை

சுசீந்திரம் அருகே பூஜை அறையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி சுஜாதா வயது (48). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் திருமண வயதை எட்டிய இரு மகள்களுக்கும் திருமணம் தள்ளிக் கொண்டே போனதால் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.சம்பவத்தினம் வீட்டின் பூஜை அறையில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, அறையில் உள்ள பேன் கொக்கியில் சுஜாதா தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டுள்ளார். இது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story