பெண் தற்கொலை

பெண் தற்கொலை

தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், கீழப்பனையூர் வெட்டுக்காடு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரிமளம் அருகே கீழப்பனையூர் வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(38). இவரது மனைவி உஷா(35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுரேசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததுடன், அடிக்கடி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த உஷா வீட்டு உத்திரத்தில் சேலையால் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உஷாவின் தந்தை வாசு அரிமளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story