பெண் தற்கொலை

பெண் தற்கொலை

தற்கொலை 

பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாற்றில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி (31). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்று பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக காயத்ரி மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்து வெகுநேரமாகியும் காயத்ரி வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே காயத்ரி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story