பெண் தூக்கு போட்டு தற்கொலை

பெண் தூக்கு போட்டு தற்கொலை

பெண் தூக்கு போட்டு தற்கொலை

சர்க்கரை நோயால் அவதிப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி காஞ்சனா (வயது 60). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் கணவன் - மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். காஞ்சனாவுக்கு சர்க்கரை நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்த நோயால் அவதிப்பட்டு தினமும் மன வேதனையால் தவித்து வந்தார். இந்த நிலையில் கணவர் குமார் சொந்த வேலை காரணமாக நேற்று சின்னசேலம் சென்று விட்டார். யாரும் இல்லாத போது காஞ்சனா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னசேலம் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி அவரது கணவர் குமார் கதவை தட்டி வெகு நேரம் ஆகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்தார். இதனால் குமார் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசில் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காஞ்சனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story