குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

 அரியூரில் குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் தூக்குட்டு தற்கொலை செய்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது. 

அரியூரில் குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் தூக்குட்டு தற்கொலை செய்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.
வேலூரை அடுத்த பாப்பான்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி கீதா (31). கணவன்-மனைவிக்கு இடையே சம்பவத்தன்று குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது விஜயகாந்த் கடுமையாக மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த கீதா வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய விஜயகாந்த் தூக்கில் மனைவி தொங்குவதை கண்டு கதறி அழுதார்.தகவலறிந்த அரியூர் போலீசார் அங்கு சென்று கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரியூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story