கன்னியாகுமரி : பெண் தற்கொலை

கன்னியாகுமரி : பெண் தற்கொலை
பெண் தற்கொலை
கன்னியாகுமரின் மாவட்டத்தில், மன்னாரங்கோடு பகுதியில் கணவனை பிரிந்து சென்ற மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள மன்னாரங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரசலையன் (50). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி சுலோஜனா (49). கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுலோஜனா கடந்த 4ஆண்டுகளாக இரணியல் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 3 மகன்களுடன் வசித்து வந்தார். ஆனாலும் சுலோஜனா கணவர் ஊரின் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்வது வழக்கம். அப்போது தனது கணவர் ரசலையன் குறித்து உறவினர்களிடம் நலம் விசாரித்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் கணவரின் வீட்டிற்கு அவர் செல்வதில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுலோஜனா தனது மகனிடம் ஒரு கோயிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். நேற்று காலையில் குலசேகரத்தில் கணவர் வீட்டருகே உள்ள ஒரு கிணற்றின் அருகே சுலோச்சனா மயங்கிய நிலையில் கிடப்பதை அப்பகுதியினர் கண்டுள்ளனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுலோஜனா விஷம் குடித்து இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Tags

Next Story