வாழ்க்கை மீது வெறுப்பு – பெண் எடுத்த விபரீத முடிவு

வாழ்க்கை மீது வெறுப்பு – பெண் எடுத்த விபரீத முடிவு

பெண் தற்கொலை

வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஊனையூர் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மனைவி இலக்கியா வயது (32) தன்னுடைய வீட்டில் தூங்கும் போது வாழ்க்கையின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக தற்கொலை செய்யும் நோக்கில் விஷமருந்தி உள்ளார். இதையடுத்து அவருடைய கணவர் உள்ளிட்ட உறவினர்கள் அவரை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் உடற்கூர்வு ஆய்விற்கு அனுப்பப்பட்ட நிலையில் புகாரின் அடிப்படையில் திருமய காவல் நிலைய உதவி ஆய்வாளர் காந்திமதி வழக்கு பதிவு செய்து மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story