சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதி பெண் பலி

சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதி பெண் பலி

விபத்தில் பெண் பலி

ஆத்தூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது, மோட்டார் பைக் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், முக்காணி பிள்ளைமார் தெருவைச் சேர்ந்தவர் மலையாண்டி மனைவி சுடலி (63), இவர் நேற்று அப்பகுதியில் திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த சுடலி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டிவந்த தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த பூர்ணசந்திரன் மகன் மதன்குமார் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story