காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு !

காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு  !

 பெண் உயிரிழப்பு 

தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார்.

தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.

யானையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வடபகுதியை விட்டு வெளியேறி விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை தின்றும் சேதபடுத்தியும் வருக்கிறது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஜோராஒசூர் கிராமத்தில் நேற்று மாலை சுந்தரி (43) என்பவர் கால்நடைகளை மேய்த்துக் |கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை எதிர்பாராத விதமாக அவரை தாக்கியது.

அதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து அனுமதித்து, பிறகு மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக ñதெரிவித்தனர். தற்போது ஜீரகள்ளி வனத்துறையினர், தாளவாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story