சிவகாசி அருகே சரக்கு வாகனம் மோதி பெண் பலி

சிவகாசி அருகே சரக்கு வாகனம் மோதி பெண் பலி

சிவகாசி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தார்.


சிவகாசி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம்.இவரது மனைவி ஜோதி (37) இவர் நேற்றுமுன்தினம் தனது தந்தை நாகராஜ் உடன் சிவகாசி - திருத்தங்கல் மெயின் ரோட்டில் டூவீலரில் தனியார் திரையரங்கம் வழியாக சென்று கொண்டிருந்தார்,அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் தந்தை மகள் இருவரும் சாலையில் விழுந்தனர்.அப்போது சரக்கு வாகனம் ஜோதியின் மீது ஏறி இறங்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்,அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் சரக்கு வாகன டிரைவர் பள்ளப்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story