திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி

திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி
மின்சாரம் தாக்கி பலி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷனை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி மங்கை என்ற மங்கம்மாள் (வயது 55). இவர் தனது வீட்டில் இருக்கும் மின்விளக்குக்கான சுவிட்ச்சை அழுத்தினார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மங்கை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story