தவறான சிகிச்சையால் பெண் மரணம்

தவறான சிகிச்சையால் பெண் மரணம்

தவறான சிகிச்சையால் பெண் மரணம் 

திண்டல் பகுதியில் காய்ச்சல் காரணமாக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென உயிரிழந்தார். இதனால் சாலைமறியலில் ஈடுபட்ட இப்பெண்ணின் உறவினர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவரது மனைவி வளர்மதி கடந்த 23ஆம் தேதி காய்ச்சல் காரணமாக ஈரோடு பெருந்துறை ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு திடீரென வளர்மதி உயிரிழந்தார். இந்நிலையில் மருத்தவரின் தவறான சிகிச்சையில் வளர்மதி உயிரிழந்த்தாக கூறி அவரது உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனால் ஈரோடு - பெருந்துறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சூரம்பட்டி காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்

Tags

Next Story