நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்து - பெண் சாவு 

நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்து - பெண் சாவு 
பிரபா செலின்
கன்னியாகுமரி மாவட்டம், மார்தாண்டம் அருகே ஸ்கூட்டரின் முன் நாய் பாய்ந்ததில் தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜான் சுஜன் மனைவி பிரபா செலின் (42). சம்பவ தினம் பிரபா செலின் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, தனது ஸ்கூட்டரில் மார்த்தாண்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் பிரபா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மீட்டு, மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பின், திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பிரபா செலின் நேற்று உயிரிழந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story