பிரிட்ஜிலிருந்து பால் பாக்கெட் எடுத்த பெண் மின்சாரம் தாக்கி பலி

பிரிட்ஜிலிருந்து பால் பாக்கெட் எடுத்த பெண் மின்சாரம் தாக்கி பலி
வாணி 

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள வரகுணராமபுரம் பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று இரவு அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்ட நிலையில் அதிகாலை 4 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரகுணராமபுரத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மாரிமுத்துவின் வீட்டில் அவரது மனைவி வாணி வழக்கம்போல் காலையில் எழுந்து டீ போடுவதற்காக ஃப்ரிட்ஜில் இருந்து பாலை எடுத்துள்ளார் அப்போது வாணி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக கணவர் மாரிமுத்து மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் பொது வழியிலேயே உயிரிழந்துள்ளார் இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story