பூட்டியிருந்த வீட்டில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட பெண்- காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

பூட்டியிருந்த வீட்டில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட பெண்- காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

 கொள்ளையில் ஈடுபட்ட பெண்

போச்சம்பள்ளி அருகே பூட்டியிருந்த வீட்டில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட பெண்- பகுதி மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
போச்சம்பள்ளி அருகே பூட்டியிருந்த வீட்டில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட பெண் பகுதி மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் தொடர் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி இவரது மனைவி கண்ணம்மாள் இவர் இன்று விடியற்காலை வீட்டில் இருந்து சுமார் 1 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு மடத்தானூர் கிராமத்திற்கு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அதனை நோட்டமிட்ட பெண் ஒருவர் பூட்டியிருந்த வீட்டில் நுழைந்து பிரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து வீட்டில் இருந்து வெளியே வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்பொழுது முன்னுக்கு பின் முரணாக பேசிய அந்த பெண்ணை பிடித்த கிராம மக்கள் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக கண்ணம்மாள் கொடுத்த புகாரின்பேரில் போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட பெண் திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த திருமானூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி மணிமேகலை என்பதும் இவரின் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறி வருவதால் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story