மின்சாரம் பாய்ந்து பெண் பலி

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டிஆழ்துளை குழாய்க் கிணற்றில் இருந்து மின் மோட்டாரை வெளியே எடுத்துப் பார்த்தபோது, மோட்டாரிலிருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியைச் சேர்த்தவர் விவசாயி சரவணன். இவரது மனைவி கோமதி (32). இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணனும், கோமதியும் சனிக்கிழமை வீட்டின் அருகே உள்ள ஆழ்குழாய்க் கிணற்றிலுள்ள மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்க வெளியே இழுத்துள்ளனர்.அப்போது எதிர்பாராதவிதமாக கோமதி மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு கீரனூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கோமதி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கீரனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story