கூவத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி

கூவத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி

பைல் படம் 

கூவத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கூவத்துார் அருகே நாவக்கால் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் 24. இவர், கடந்த ஜன., மாதம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த யாஷ்வினி, 19, என்ற பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்கள், நாவக்கால் பகுதியில் வசித்து வரும் நிலையில்,நேற்று காலை துணி துவைத்து, கம்பி வேலியில் காய வைத்தபோது, அருகே இருந்த மின்கம்பத்தின் ஸ்டே கம்பி, கம்பி வேலியுடன் இணைந்து இருந்ததால், மின்சாரம் பாய்ந்து யாஷ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூவத்துார் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், திருமணமான நான்கு மாதங்களில் இளம்பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Next Story