சுசீந்திரம் அருகே பைக்குகள் மோதல் பெண் உயிரிழப்பு

சுசீந்திரம் அருகே பைக்குகள் மோதல் பெண் உயிரிழப்பு
பைல் படம்
சுசீந்திரம் அருகே பைக்குகள் மோதல் பெண் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.
நாகர்கோவில் அருகே புத்தன் துறை பகுதியை சேர்ந்தவர் கணேசன் மனைவி ஜெயா (52) சம்பவ தினம் இவர் தனது மகன் கார்த்திக் (20 ) என்பவருடன் பைக்கில் மேலகிருஷ்ணன் புதூர் - ஈத்தாமொழி சாலையில் சென்று கொண்டிருந்தார். மேல கிருஷ்ணன் புதூர் பத்திரகாளி அம்மன் கோயில் அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த சங்கர குமார் ( 39) என்பவர் ஓட்டி வந்த பைக் இவர்கள் மீது மோதியது. இதில் ஜெயா தூக்கி எறியப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயா உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி சங்கர குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story