நாட்டரம்பள்ளி அருகே கார் விபத்தில் பெண் உயிரிழப்பு

நாட்டரம்பள்ளி அருகே கார் விபத்தில்  பெண் உயிரிழப்பு

கார் விபத்தில் பெண் உயிரிழப்பு

நாட்றம்பள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழப்பு மற்றும் இரண்டுபேர் காயம்!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு மற்றும் இரண்டுபேர் காயம்! நாட்றம்பள்ளி அருகே கார் ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையோரம் உள்ள நிலத்தின் தடுப்பு மீது மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து, காரில் பயணம் செய்த மனைவி கணவர் மற்றும் 4 வயது மகன் முன்பு உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் ஸ்டெர்லிங் குரூப் அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வரும் தன்னுஜ் (வயது 36) இவரது மனைவி நேஹா (வயது 35) இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது டக்ஸ் என்கின்ற 4 வயது குழந்தையுடன் நேற்று இரவு சென்னையில் வேலை முடித்துவிட்டு பெங்களூருக்கு செல்ல தங்களுக்கு சொந்தமான காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது காரை தன்னுஜ் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வேலூர் கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது நாட்றம்பள்ளி அருகே பைனப்பள்ளி பகுதியில் அதிகாலை 3 மணியளவில் ஓட்டுநரின் கவனக்குறைவால் தூக்கத்தில் சாலையோரம் உள்ள நிலத்தின் தடுப்பு வேலி மீது மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நேஹா அடிப்பட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் மேலும் 4 வயது குழந்தை எந்தவித காயமின்றி உயிர் தப்பியது. இது குறித்து தகவல் அறிந்து நாட்றம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் படுகாயம் அடைந்த தன்னுஜ் சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து நாட்றம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story