சரக்கு லாரி மீது இருசக்கர வாகன மோதி பெண் உயிரிழப்பு

சரக்கு லாரி மீது இருசக்கர வாகன மோதி பெண் உயிரிழப்பு
சரக்கு லாரி மீது இருசக்கர வாகன மோதி ஒருவர் உயிரிழப்பு
சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதியதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் மாவட்டம், விருதாச்சலம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஹனீபா, 22. இவர், கடந்த ஒரு வருடமாக, சிங்கபெருமாள் கோவிலில் வாடகை வீட்டில் தங்கி, ஒரகடம் பகுதியில் உள்ள யமாஹா தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, முகமது ஹனீபா சிங்கபெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் நோக்கி, 'ஹீரோ ஹோண்டா பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில் சென்றார்.

சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், தெள்ளிமேடு கிராமத்தை கடந்து சென்ற போது, பழுதாகி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது, முகமது ஹனீபாவின் இருசக்கர வாகனம் மோதியது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த முகமது ஹனீபா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார், முகமது ஹனீபா உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story