காரிமங்கலம் அருகே வேன் மோதி பெண் உயிரிழப்பு

காரிமங்கலம் அருகே வேன் மோதி பெண் உயிரிழப்பு

காவல் நிலையம்

காரிமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்தவர்கள் சாலை விபத்தில் சிக்கியதில் பெண் உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சபரீஸ்வரன். இவரது மனைவி சுகந்தாமணி,சபரீஸ்வரன், தங்கை கவி தாமணி மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் குடும்பத்துடன், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லிக்குட்டை ஊராட்சி காமலாபுரம் கிராமத்தில் நடந்த குலதெய்வ கோயில் திருவிழாவில் பங்கேற்க வந்திருந்தனர்.

இதில் கவிதாமணி மற்றும் சுகந்தாமணி ஆகியோர், அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பிக்கப் வேனை டிரைவர் பின்னோக்கி வேகமாக இயக்கியுள்ளார். அப்போது. நடந்து சென்ற இருவர் மீதும் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கவிதாமணி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சுசுந்தாமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story