தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது

தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது

தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது

விழுப்புரம் மாவட்டம்,ஜெகநாதபுரம் பகுதியில் மது விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மனைவி ரங்கநாயகி (வயது 43). இவர் வளவனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராயம் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த மாதம் 11-ந் தேதி ஜெகநாதபுரம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த ரங்கநாயகியை வளவனூர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 108 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, இவர் இதுபோன்ற குற்றச்செ யல்களில் ஈடுபட்டு வந்ததால் அத்தகைய செயல்களை தடுக் கும்பொருட்டு தடுப்புக்கா வல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாஜ் பரிந்துரை செய்தார். இதையடுத்து ரங்கநாயகியை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். அதன்பேரில் ரங்கநாயகியை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நேற்று வளவனூர் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், வேலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags

Next Story