தாயுடன் ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு சென்று திரும்பிய இளம்பெண் ஓட்டம்

தாயுடன் ஆஸ்பத்திரி  சிகிச்சைக்கு சென்று திரும்பிய இளம்பெண் ஓட்டம்
இளம்பெண் மாயம்
கன்னியாகுமரி மாவட்டம், பெரிய விளை பீச் ரோடு பகுதியில் மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த பெண் மாயமான பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார், பெரிய விளை பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் டிட்டோரிசா மனைவி அனுஷா (29) இவர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையே அனுஷா கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவாக இருந்துள்ளார். இதை அடுத்து அவரை கடந்த 12-ம் தேதி மாலை சுமார் 3 மணி அளவில் சிகிச்சைக்காக நாகர்கோவில் பால் பண்ணை அருகே உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரது தாயார் ரேவதி (57) அழைத்து சென்றுள்ளார்.

சிகிச்சை முடிந்த பிறகு ரெண்டு பேரும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். கணேசபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது தாயாரின் கையை தட்டி விட்டு அங்கிருந்து அனுஷா சென்றுள்ளார். அவர் எங்கு சென்றார் என்னஆனார் என்பது உடனடியாக தெரியவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இது தொடர்பாக ரேவதி கோட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story