ஆர்.கே.பேட்டையில் இளம்பெண் மாயம்

ஆர்.கே.பேட்டையில் இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

திருவள்ளூவர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் இளம்பெண் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த பத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் சந்தியா, 22. இவர், கடந்த 17ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். 18ம் தேதி அதிகாலை 4:00 மணியளவில் சந்தியாவை காணவில்லை. அக்கம் பக்கம் உள்ள வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் சந்தியா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆர்.கே.பேட்டை போலீசில், வெங்கடேசன் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story