பெண் மாயம் - போலீசார் விசாரணை

பெண் மாயம் - போலீசார் விசாரணை

காவல் நிலையம் 

திட்டச்சேரி அருகே கடை தெருவுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற பெண் மாயமானது குறித்து அவரது சகோதரி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி குருமூர்த்தி மனைவி செல்வி வயது 32 இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குருமூர்த்தி தற்போது பெங்களூரில் வேலை செய்து வருகிறார் செல்வி தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார் இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி மாலை 5 30 மணிக்கு கடை தெருவுக்கு சென்று வருவதாக தனது பிள்ளைகளிடம் கூறி சென்ற செல்வி வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை இது தொடர்பாக செல்வியின் அக்கா காரைக்கால் சேர்ந்த தனவாணி என்பவர் திட்டச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்

Tags

Next Story