இருசக்கர வாகனம் மீது கார் மோதி பெண் படுகாயம்

இருசக்கர வாகனம் மீது கார் மோதி பெண் படுகாயம்

இருசக்கர வாகனம் மீது கார் மோதி பெண் படுகாயம்

குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி பெண் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காந்தி நகர், பத்ரகிரியார் தெருவில் வசிப்பவர் காந்திமதி, 48. கூலி வேலை. இவர் நேற்றுமுன்தினம் மாலை 02:15 மணியளவில் கவுரி தியேட்டர் அருகே உள்ள மளிகை கடையில் சாமான்கள் வாங்க, தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கனரா வங்கி ஏ.டி.எம். அருகே சென்ற போது, இவருக்கு பின்னால் வந்த மாருதி எக்கோ வாகன ஓட்டுனர், இவர் வந்த டூவீலர் மீது மோதியதில், காந்திமதி பலத்த காயமடைந்தார். இவர் குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன், 42, என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story