மாங்காய் பறித்ததாக கூறி சிறுவர்களை கட்டி வைத்து சூடு வைத்த பெண்

மாங்காய் பறித்ததாக கூறி சிறுவர்களை கட்டி வைத்து சூடு வைத்த பெண்

 கொல்லங்கோடு அருகே பக்கத்து வீட்டில் மாங்காய் பறித்ததால் சிறுவர்களை கட்டி வைத்து சூடு வைத்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கொல்லங்கோடு அருகே பக்கத்து வீட்டில் மாங்காய் பறித்ததால் சிறுவர்களை கட்டி வைத்து சூடு வைத்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவருக்கு பத்து மற்றும் எட்டு வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த சிறுவர்கள் நேற்று பக்கத்து வீட்டு தோட்டத்தில் சென்று பிஞ்சு மாங்காய் பறித்து தின்றுள்ளனர்.இதை கவனித்த பக்கத்து வீட்டுப் பெண் சிறுவர்களை மடக்கி பிடித்து நாற்காலியில் கட்டி வைத்து கை கால்களில் தீயால் சூடு வைத்து அனுப்பியுள்ளார்.

வீட்டுக்கு வந்த போது தாயார் காயங்கள் குறித்து பிள்ளைகளிடம் கேட்டபோது அவர்கள் சைக்கிளில் இருந்து விழுந்ததாக பொய் கூறியுள்ளனர். இரவில் வலியால் துடித்த சிறுவர்களை 2 தனியார் மருத்துவமனைகளில் சென்றபோது சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.தொடர்ந்து கொல்லங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது காயத்தை பார்த்த டாக்டர்கள் யார் இந்த சிறுவர்களுக்கு சூடு வைத்தது என்று கேட்டுள்ளனர்.

அதன் பிறகு சிறுவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சை அளித்தனர்.வீட்டிற்கு வந்தபோது சிறுவர்களின் தாயார் விசாரிக்கையில் பக்கத்து வீட்டுப் பெண் தீயால் சூடு வைத்த விவரத்தை சிறுவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து சிறுவனின் தாய் பக்கத்து வீட்டு பெண் கலா என்பவர் மீது கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story