மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்கும் முயன்றதால் பரபரப்பு.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்கும் முயன்றதால் பரபரப்பு உண்டானது.

திருப்பூரில் இரண்டாவது கணவரின் கொடுமை தாங்காமல் பெண் தீ குளிக்க முயன்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு. திருப்பூர் குமார் நகரை சேர்ந்தவர் மீனா இவரது கணவர் அழகர்சாமி திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்., இதனிடையே முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அழகர் சாமியை விட்டு பிரிந்து கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் தனது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபாகரன் தினமும் மது அருந்திக்கொண்டு தகராறில் ஈடுபடுவதோடு தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி மீனா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தால் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவரை மீட்டு தெற்கு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story