தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

X
தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
கள்ளகுறிச்சி மாவட்டம், ரிஷிவந்தயம் அருகே தவறி விழுந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.
ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடியைச் சேர்ந்தவர் பழனிவேல் மனைவி சரஸ்வதி, 55; நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே கட்டியிருந்த ஆடுகளை பார்த்து விட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் நேற்று அதிகாலை இறந்தார். ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story
